இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2010

சொகுசுப் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம்

வணக்கம் தமிழர்களே !
கோவையில் நடை பெற உள்ள உலகத் தமிழ்செம்மொழிமாநாட்டை தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருக்கிறது . அதனை ஒட்டி கோவையில் 01-02-2010 அன்று தமிழக துணைமுதல்வர் 150 நகரப்பேருந்துகளையும், 50 புறநகர் பேருந்துகளையும் இயக்கத்துவக்க விழா கோவை சிறைசாலை மைதானத்தில் நடந்தது. 01-02-2010 அன்று முதல் இப்பேருந்துகள் இய்ககப்படன. புதிதாக விடப்பட்டுள்ள பேருந்துகளைப் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும். அப்பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு அதிர்ச்சியாகயிருந்தது. இதுவரை குறைந்த படச கட்டணமாக 2 ரூபாய் மட்டுமே கொடுத்து பயணம் செய்த மக்களுக்கு அக்கட்டணம் பண்மடங்காக உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசு முன்னறிவிப்பின்றி பழைய பேருந்துகளை எடுத்துவிட்டு அவற்றிகுப் பதிலாக சொகுசுப் பேருந்துகளை இயக்கின. இதற்கு மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்ப்பு இருந்ததது . இதனால் புதிய சொகுசு பேருந்துகளை மாணவர்களும் , பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர் . இதனால் 04-0௨-2010 அன்று புதிய பேருந்துகளை நிறுத்திவிட்டு பழைய பேருந்துகளை இயக்கினர் . ஒரு சில நாள்கள் கழித்து மீண்டும் எல்லா சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதோடு சொகுசுப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதை முன்பாகவே செய்திருந்தாள் அரசுக்கு கொட்ட பெயர் வந்திருக்காது அல்லவா?