
அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் அங்குதான் இந்த பகல் கொல்லை நிகழ்கிறது.. மக்களுக்காக வேலை செய்ய வந்திருக்கும் பேருந்து நடத்துனர். பேருந்தில் ஏரும் போதே பயணிகளை திட்டுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் சில பயணிகளிடம் சண்டை போடுவதும் வாடிக்ககையாகிவிட்டது. ஏல்லா நடத்துநர்களும் இப்படி அல்ல நூற்றுக்கு எழுவது சதவிகிதம் இப்படித்தான் இருக்கிறார்கள். பேருந்தில் ஏறியதும் சில்லறை வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்வார். பின்னர் பயணச்சீட்டு கொடுக்கும் போது சில்லறை கொடுக்காமல் 10 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அதான் ஏரும்போதே சொன்னல்ல என்று கோபமாக திட்டுவதும் முனங்குவதும் சில நடத்துனர்கள் வாய்க்கு வந்தவாறு தகாதறா வார்த்தைகளால் பேசுவதும் தொடர்கதையாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் சில்லறை இல்லை என்றால் பேருந்தை நிறுத்தி இடையிலேயே கீழே இறக்கியும் விடுகின்றனர். எல்லோருமே சில்லறையுடன் வரமுடியாது அதை நடத்துனர்கள் புரிந்து கொள்வதில்லை. மேலும் 10 ரூபாய் கொடுத்து 3.50 க்கு பயணச்சீட்டு வாங்கினால் பயணச்சீட்டை மட்டும் கொடுத்துவிட்டு மீதப்பணம்; கொடுக்காமல் எதுவுமே சொல்லாமல் சென்றுவிடுவார்கள். அல்லதுமீதம் 6 ரூபாய் மட்டுமே திரும்ப மீதப்பணமாக கொடுக்கின்றனர். மீதம் உள்ள 50 பைசா கேட்டாலும் அப்ப சில்லறை கொடு என்று கேட்டு திட்டுகிறார்கள். அதற்கு பயந்தே பல மக்கள் அந்த 50 பைசாவை கேட்காமல் செல்கின்றனர். இனிமோல் இந்த 50 பைசா பிரச்சனையை தீர்க்க ஒரே வழி எந்த ஒரு பயணச்சீட்டுக்கும் இனி 2.50 3.50 4.50 5.50 என்ற கட்டணங்களை இனிமேல் 3, 4, 5, 6, 7, என்று வைத்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் 50 பைசா அதிகமாக கொடுத்த மனநிலையில் செல்லும் பயணிகளுக்கும், பல போரிடம் 50 பைசா என்றால் அந்த நடத்துனருக்கு அவருடைய ஊதியத்தை விட அதிகமான பணம் கிடைக்கின்றது. இதை அரசு கவனத்தில் கொண்டு இவ்வாறு கட்டணத்தை மாற்றி அமைத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். பொது மக்கள் மத்தில் வேலை செய்ய வந்திருக்கும் அரசுப் பணியாளர்கள் சிலர் பொறுமையாக மென்மையாக முறையில் மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற சிறப்பு வகுப்புக்களை இன்றுள்ள பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு கற்றுக் கொடுக்க அரசு போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யலாம்.. தற்போது கோவையில் புதிதாக இயக்கப்பட்ட பல சொகுசுப் பேருந்துகளில் உள்ள தானியங்கி கதவுகளை எந்த ஓட்டுநரும் பயணத்தின் போது திறந்து மூடுவதில்லை. ஒரு சொகுசுப் பேருந்தில் கொச்சைக் கயிறு கொண்டு கதவை கட்டி வைத்திருக்கின்றனர். பேருந்துகளை சுத்தமாக வைத்திருப்பதில்லை. மேலும் பேருந்தை பராமாரிக்க அதிகமாக வேலையாட்களை அரசுப்போக்குவரத்துத்துறை நியமிக்கலாம். அரசுப் போக்குவரத்துறை சேவை என்பதை மறந்து வருவாயை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புடன் செயல் படுகிறது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு நடந்தே போய்விடலாம் எனத் தோன்றுகிறது. வைத்தால் குடுமி இல்லை மொட்டை என்ற கதையாக அரசுப் பேருந்துகள் சாலையில் ஓடுவதற்கு தகுதியற்ற பல பேருந்துகள் உள்ளன. மேலும் குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் போவதற்குக் கூட சொகுசுப் பேருந்து என்று அதிக கட்டணம் வலிக்கப்படுகிறது. ஆனால் மிக நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அதை செகுசுப் பேருந்தாக மாற்றினாலாவது பயன் உண்டு மக்கள் பயணக்கலைப்பு தொரியாமலாவது தொலைவான ஊர்களுக்கு செல்வார்கள். அதை விடுத்து இப்படி பணம் அதிகமாக வசுலிக்க வேண்டும் என்பதே அரசுப் போக்குவரத்துறையின் நோக்கமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இல்லாமல் வருவாயை பெருக்குதிலேயே அரசுப் போக்குவரத்துத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
