இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 மே, 2011

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல்

வணக்கம்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலை தமிழகத் தேர்தல் ஆணையம் மிக
நேர்மையான முறையிலும் மிகுந்த பாதுகாப்புடனும் நடத்தி முடித்தது. இத்
தேர்தலில் தேர்தல் தேர்தல் ஆணையம் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து அதை மிக சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தியது. இத் தேர்திலில் தான் தேர்தல் ஆணைத்திற்கு இவ்வளவு அதிகாரங்கள் உள்ளதா என மக்கள் வியப்படையும் வண்ணம் தேர்தல் ஆணையம் செயல்பட்டது. இத்தத் தேர்தலில் தான் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை என்று தோதல் ஆணையமே பல ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுததியது.நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்தியதால் தான் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 80
சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் பதிவாயின. கடந்த ஐந்தாண்டுகளில் ஆளும்
கட்சி ஏற்படுத்திய அதிர்ப்த்தியை மக்கள் வாக்களிப்பதில் காட்டினர்.
இதனால் திமுக பல இடங்களில் தோல்வியை தழுவியது. எதிர்கட்சியாக இருந்த அதிமுககூட்டணி 203 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. புதிய அரசு இலவசங்களை வாரி வழங்குவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தும் நோக்கோடு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் போதும் . மக்களின் வாழ்க்கைத்தரம் தானே உயரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக